About

Saturday 29 May, 2010

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணி ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை : வட்டார வள மைய பயிற்றுனர் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1,064 வட்டார வள மைய பயிற்றுனர்களை நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது. பணி நாடுனர்களின் திருத்திய பட்டியல், கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வாகியுள்ள பணி நாடுனர்களுக்கு, வரும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்.




இதற்கான அழைப்புக் கடிதங்கள், சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டதற்கான நகலை எடுத்துவந்து, சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்த்தலின்போது சமர்ப்பிக்கப்படும் பணி அனுபவச் சான்றிதழ், உண்மைத் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்டவர்கள் தேர்வுக்கு தகுதியற்றவராகவும், குற்றவியல் நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவர். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.