பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பட்டதாரி ஆசிரியர்கள் 5,300 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 2,500 பேர் மற்றும் 500 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதன் மூலம் 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் என 10 ஆயிரத்து 800 ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.