About

Friday 25 June, 2010

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வின் KEY ANSWER வெளியீடு !

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வின் அனைத்து பாடங்களுக்கும் KEY ANSWER ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடபட்டுள்ளது

LINK IS  CLICK HERE

Wednesday 23 June, 2010

நியமன ஆணையை எதிர்பார்க்கும் பட்டதாரி ஆசிரியர்கள்: காலிப் பணியிடங்களால் கல்வித்தரம் பாதிப்பு

ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 1,122 பேர் பல மாதங்களாகப் பணி நியமன ஆணையை
எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

Saturday 12 June, 2010

15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய அரசு நடவடிக்கை

வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம், 14 ஆயிரத்து 900 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 6,300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி முடிந்த நிலையில், அடுத்ததாக 6,300 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Wednesday 9 June, 2010

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியீடு !

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 921 முதுகலை ஆசிரியர்கள், வேலை வாப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செயும் பணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்து வந்தது. தகுதி வாந்தவர்கள் அழைக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதத்தில் அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதையடுத்து, தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொண்டவர்கள்,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.nic.in  மூலம் தெரிந்துகொள்ளலாம் .

Friday 4 June, 2010

உதவிப் பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு !

உதவிப் பேராசிரியர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் இடம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.