About

Sunday 10 July, 2011

கல்லூரிகளில் ஷிஃப்ட்-2 பிரிவுக்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவு

சென்னை, ஜூலை 6: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஷிஃப்ட்-2 பிரிவில் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இவ்வாறு நியமிக்கப்படுபவர்களுக்கான ஊதியத்துக்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கி, அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 62 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஷிஃப்ட்-2 கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது.  இதில் பி.எஸ்சி. கணிதம், பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் முதலில் சுயநிதி படிப்புகளாக வழங்கப்பட்டு பின்னர் அரசு உதவி பெறும் படிப்புகளாக மாற்றப்பட்டன.  இந்த ஷிஃப்ட்-2 படிப்புகள் அனைத்திலும் ஆரம்பம் முதல் கௌரவ விரிவுரையாளர்களே நியமிக்கப்பட்டனர்.