About

Friday 4 June, 2010

உதவிப் பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு !

உதவிப் பேராசிரியர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் இடம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.



அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (சைதாப்பேட்டை), அரசு ஆண்கள் கலைக் கல்லூரி (நந்தனம்), காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி (அண்ணா சாலை), விவேகானந்தர் இல்லம் அடுத்துள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், ராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் பாரதி மகளிர் கல்லூரி ஆகிய ஏழு இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் பட்டியலில் இடம்பெற்று, அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்து நகல் எடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.