About

Tuesday 30 August, 2011

பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் அரசு தெளிவு : இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பகுதி நேர பணியிடமாகாது

முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஓவிய ஆசிரியர்கள், தையல், கைவேலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய, மூன்று பிரிவினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். 


Tuesday 23 August, 2011

2010 11ம் கல்வியாண்டில் தேர்வான 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!

சென்னை: சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடந்தது.  இதுசம்பந்தமாக, தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

14 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமனம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். 

 பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:  

Sunday 14 August, 2011

900 புதிய ஆசிரியர்கள் நியமனம் அறிவிப்பால் போட்டித் தேர்விற்கு தயாராகும் முதுகலைப் பட்டதாரிகள்

தமிழகத்தில் புதிதாக 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 9 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 900 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இந்த கூடுதல் நியமனம் மூலம் அரசுக்கு ரூ. 44 கோடியே 91 லட்சம் கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:

அறிவியல், கணித ஆசிரியர்களை போல நடுநிலை பள்ளிகளில் தமிழாசிரியர்களையும் நேரடியாக நியமிக்க வேண்டும் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை

நடுநிலைப் பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கில ஆசிரியர்களைப் போல தமிழ், வரலாறு, புவியியல் பாட ஆசிரியர்களையும் நேரடியாக நியமிக்க வேண்டும் என்று வேலையில்லாத பட்டதாரி தமிழாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக.ராமு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

Wednesday 3 August, 2011

கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 4858 பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு அரசு ஒப்புதல்

தமிழகத்தில் கடந்தகல்வி ஆண்டின் இறுதியில் தேர்வு செய்யப்பட்டோரின் திருத்திய பட்டியலை தயார் செய்து, ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் இறுதியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். வேலை வாய்ப்பு அலுவலக "சீனியாரிட்டி' பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பணி நியமன உத்தரவு வழங்குவதற்குள் சட்டசபை தேர்தல் வந்ததால், அனைத்து செயல்பாடும் நின்று போனது. இந்நிலையில் பணி நியமனம் தொடர்பாக அரசு புதிய உத்தரவிட்டு (அரசாணை எண்: 105) உள்ளது.