About

Wednesday 6 October, 2010

சென்னை,மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் தெரிவுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு

             சென்னை,மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் தெரிவுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 06-10-2010 மாலை வெளியிடப்பட்டுள்ளது. 

            அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் காலியாக உள்ள 1064 வட்டார ஆசிரியர் பயிற்றுநர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்த பதவிகளுக்கான போட்டி தேர்வு கடந்த பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் செய்த குழப்பமான முடிவு காரணமாக இரண்டு முறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
                    
            இதனிடையே, முதல் தேர்வுப் பட்டியலில் தேர்வான 300க்கும் மேற்பட்டோர், இரண்டாவது பட்டியலில் இடம் பெறாததைக் கண்டதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் எட்டு கேள்விகள் மற்றும் அது தொடர்பான விடைகளில் பிரச்னை இருப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்  17-08-2010 அன்று எட்டு கேள்விக்கும் மறுமதிப்பீடு செய்து இரு வாரத்திற்குள் முடிவை வெளியிடவேண்டும் என தீர்ப்பு வழங்கியது . முடிவே வெளியிடப்படாத நிலையில் , மறுமதிப்பீட்டை நிறுத்தவும் மேலும் தேர்வை ரத்து செய்யவும் சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர் இம்மனுக்கள் 30-08-2010 அன்று மதுரை ஐகோர்ட் கிளையால் ரத்து செய்து ,  சென்னை ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது .
             
            இதன் அடிப்படையில் இன்று 06-10-2010 ஆசிரியர் தேர்வு வாரியம் , ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு 2009-10 க்கான முடிவு மற்றும் தற்காலிக தெரிவு பட்டியலை வெளியிட்டுள்ளது .
தேர்வு முடிவு மற்றும் தெரிவுப்பட்டியலுக்கான சுட்டி :

3 comments:

  1. No. of Candidates entered newly in the third time result = 190
    No. of drop outs from the second time result = 84

    Subject wise new entries:

    Tam-16
    Eng-11
    Mat-83
    Phy-08
    Che-19
    Bot-07
    zoo-15
    His-29
    Geo-02

    Total -190

    ReplyDelete
  2. எல்லாம் பணம் செய்யும் வேலை ..... அடுத்த TRB யாவது நியாயமா நடத்துங்க ......
    அம்மா வந்தா போட்டி தேர்வு மூலம் TRB ல நிறைய vacancy வரும் .... தாத்தா வந்தா சீனியாரிட்டி ல நிறைய vacancy வரும் .....

    ReplyDelete
  3. I got a message that " again a new case is filed against trb in madurai high court after third result". Is it true? What is the position presently?

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.