About

Thursday 12 August, 2010

தொடக்கக்கல்வி துறையில் 707 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு அறிவிப்பு

தொடக்கக் கல்வித் துறையில் ஒதுக்கீடு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்காக ஈரோட்டில் ஆகஸ்ட் 20-ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.



இதுதொடர்பாக, தொடக்கக் கல்வித் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் 707 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு,  தொடக்கக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு ஈரோடு திண்டல் வேளாளர் கலைக் கல்லூரியில் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

அவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணையும் அன்றே வழங்கப்படும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களால் ஆகஸ்ட் 23-ம் தேதி பணி நியமன ஆணையும் அவர்களுக்கு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.