சென்னை : பட்டதாரி ஆசிரியர் தேர்வில், விடுபட்ட பதிவுமூப்புதாரர்களுக்கு, சென்னையில் நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில், 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் இம்மாத இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. இந்நிலையில், பதிவுமூப்பு விடுபட்ட 783 பேரின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் அனுப்பி வைத்தது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேற்று துவங்கியது. 400க்கும் மேற்பட்டோர் நேற்று அழைக்கப்பட்டனர். மீதியுள்ளவர்களுக்கு, இன்று நடக்கிறது. இப்பணிகள் முடிந்ததும், 20ம் தேதிக்குள் தேர்வுப் பட்டியலை வெளியிட, தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. சட்டசபையில் அமைச்சர் அறிவித்தபடி, அடுத்த வாரத்தில் பணி நியமனங்களை முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
DSE SCHOOLS ANNUAL EXAM TIME TABLE 2024
4 weeks ago
Today is 23rd Feb, till now results itself is not published by TRB!
ReplyDeleteI think they will just drag and delay... No appointments will take place before election date announcement
This is the FACT and we must all understand it!